Tuesday, October 22, 2013

தமிழ்நாட்டில் நல்ல மனம் கொண்ட மாமனிதர்கள்
அரசு போக்குவரத்துக் கழக டைம் கீப்பர் கனகராஜ், பி.எம்.டி., என்ற தனியார் பஸ் கண்டக்டர் இளங்கோவன்
மதுரை ஆரப்பாளயத்தில் திண்டுக்கல் செல்ல பி.எம்.டி., என்ற தனியார் பஸ் ஒன்றில் ஏறிய திண்டுக்கல் ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல்., அலுவலர் ஜெயராமன், 62. இவரது மனைவி ஜீவா, 52. உட்கார இடம் இல்லாத நிலையில் வேறு ஒரு பஸ்ஸில் ஏறி அமர்நாத பின்பு தான் தங்களிடைய பையை முதல் பஸ்ஸில் தவற விட்டதை அறிந்து அதிர்ச்சியில், இறங்கி தேட துவங்கினர். அவர்களிடம் அரசு போக்குவரத்து கழக டைம்கீப்பர் கனகராஜ் விசாரித்தார்.பி.எம்.டி., பஸ்சில் பையை தவற விட்டிருக்கலாம் என கருதிய கனகராஜ், அதன் மேலாளரை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, கண்டக்டர் இளங்கோவனின் மொபைல் போன் எண்ணை பெற்றார். பின், திண்டுக்கல் சென்று கொண்டிருந்த இளங்கோவனிடம் தகவல் தெரிவிக்க, அவரும் பஸ்சில் தேடி, அனாதையாக கிடந்த பையை எடுத்து வைத்துக்கொண்டார்.அந்த பஸ் மதுரை திரும்பியதும், ஜெயராமனிடம் பை ஒப்படைக்கப்பட்டது.
நல்ல உள்ளமும் மனமும் கொண்ட அரசு போக்குவரத்துக் கழக டைம் கீப்பர் கனகராஜ், பி.எம்.டி., என்ற தனியார் பஸ் கண்டக்டர் இளங்கோவன் இவர்களை போன்றவர்களால் தான் இன்னமும் உலகம் சுற்றிக்கொண்டு இருக்கின்றது . நன்றி நன்றி நன்றி


No comments:

Post a Comment