Sunday, March 9, 2014

ஹிந்துக்களை அழிக்கும் ஹிந்து அறநிலையத்துறை ???

வேலூர் மாவட்டம் வாலாஜா பேட்டை அருகே உள்ள மிகவும் பழமை வாய்ந்த சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட கோவில்
ஸ்ரீ சௌந்தரவள்ளி சமேத பூமீஸ்வரர் கோவில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது

அக்கோவிலின் இன்றைய நிலை இதுதான் .....

அறநிலையத்துறை ஏற்றுள்ள இக்கோவிலில் உள்ளே செல்லும் போதே கருவறை முதல் பல இடங்களில் வவ்வால் தங்கி உள்ளதால் ஏற்பட்ட துர்நாற்றம் தான் அதிகமாக இருந்தது ,, விளக்குகள் இல்லாமலும் , ,பல சுவர்கள் விழுந்தும் , பெயர்ந்தும் பாழடைந்த நிலையில் உள்ளது பல இடங்கள்,, எந்த வித வசதியும் இல்லை இக்கோவிலில் ,, ஆனால் அறநிலைய துறை தூங்கி வழிகிறது ????

பல மாதங்களுக்கு முன் திருப்பணி செய்ய மக்களால் கோரிக்கை விடப்பட்ட போதும் சில நாட்களுக்கு முன்பு தான் பணிகள் தொடங்கி உள்ளது ,, மிகவும் மெதுவாக

கோவில் வருமானத்தை அரசு எடுத்து கொண்டு கோவிலையும் பராமரிக்காமல் ,இந்துக்களுக்க்ம் எதுவும் செய்யாமல் இருப்பதற்கு எதற்கு இந்து அறநிலையத்துறை ???????

நன்றி -- பாண்டிய மன்னன்

No comments:

Post a Comment